Saturday, 5 April 2014

காய்களின் பலன்களும் அதன் மருத்துவ குணங்களும் - இதோ உங்களுக்காக...!



கத்தரிக்காய்

என்ன இருக்கு: விட்டமின் சி, மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது: ஆஸ்துமாக நோயாளிகள் கத்தரிக்காயை மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து சமைத்துச் சாப்பிட உடல் சூட்டை தக்க வைக்கும்.

யாருக்கு வேண்டாம்: சரும நோயாளிகள், புண், ரணம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. அரிப்பைத் தூண்டும். அறுவை சிகிச்சை செய்துள்ளவர்கள் முதல் மூன்று மாதங்கள் சாப்பிடக்கூடாது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும் சளி, இருமலைக் குறைக்கும்.



முருங்கைக்காய்

என்ன இருக்கு: கொழுப்பு மற்றும் இரும்புச் சத்து மற்றும் விட்டமின் ஏ, சி.

யாருக்கு நல்லது: குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் சேரும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

யாருக்கு வேண்டாம்: முதியவர்கள், இதய நோயாளிகள், மூட்டு நோய் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. வாயுப் பிடிப்பை ஏற்படுத்தும்.

பலன்கள்: நரம்பு மண்டலங்களுக்கு ஊக்கம் தரும்.



மாங்காய்

என்ன இருக்கு: நார்ச்சத்து, விட்டமின் ஏ

யாருக்கு வேண்டாம்: சரும நோய், வயிற்றுவலி உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது. சூட்டைக் கிளப்பும்.

பலன்கள்: மாங்காய் சாப்பிட்டால் மலக்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.
தாது பலம் பெறும். செரிமாணத்தைத் தூண்டி மலக்குடலைச் சுத்தம் செய்யும். பசியைத் தூண்டும்.



அவரைக்காய்

என்ன இருக்கு: உயர்நிலை புரதம், இரும்பு, சுண்ணாம்புச் சத்து.

யாருக்கு நல்லது: நீரிழிவு, செரிமாணத் தொல்லை, மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம்: யாரும் இரவில் சேர்க்க வேண்டாம். நார்ச்சத்து அதிகம் என்பதால் ஜீரணம் ஆகாது.

பலன்கள்: உடலுக்கு தேவையான புரதச் சத்தினை அளிக்கவல்லது.



அத்திக்காய்

என்ன இருக்கு : விட்டமின் சி, சுண்ணாம்பு மற்றும் இரும்புச் சத்து

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

பலன்கள் : மாதம் ஒருநாளாவது அத்திக்காய் அவியல் சாப்பிடுவதால் மலக்குடல் சுத்தமாகும். மூலநோய் வராமல் தடுக்கும்.



பீர்க்கங்காய்

என்ன இருக்கு : நீர்ச்சத்தும் தாது உப்புகளும்

யாருக்கு வேண்டாம் : யாரும் இரவில் சாப்பிடக் கூடாது. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்.

பலன்கள் : உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.



கோவைக்காய்

என்ன இருக்கு : விட்டமின் ஏ.

யாருக்கு நல்லது : நீரிழிவு நோயாளிகளுக்கு.

பலன்கள் : வாய்ப்புண், வயிற்று ரணம், நாக்குக் கொப்புளம் ஆகியவற்றை போக்கும்.



புடலங்காய்

என்ன இருக்கு : உயர்நிலை புரதம், விட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, கந்தகச் சத்து.

யாருக்கு நல்லது : மூலநோய் உள்ளவர்களுக்கு.

யாருக்கு வேண்டாம் : ஆஸ்துமா, மூட்டுவலி, தலைவலி, சளி மற்றும் காய்ச்சல் உடம்பில் குத்தல் குடைச்சல் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.



பாகற்காய்

என்ன இருக்கு: பாலிபெப்டுடைட் எனும் இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்தும் வேதிப்பொருள் நிறைந்துள்ளது.

யாருக்கு நல்லது: சர்க்கரை நோயாளிகளுக்கு.

யாருக்கு வேண்டாம்: வேறு அலோபதி மருந்துகள் சாப்பிடும்போது இதனை சாப்பிடக்கூடாது. மருந்தின் தன்மையை முறியடிக்கும். அடிக்கடி சாப்பிட்டால் ஆண்மைக்குறைவு ஏற்படும்.

பலன்கள்: தொற்று நோய்களை தடுக்கும். கிருமிகளை அழிக்கும். வயிற்றில் பூச்சிகள் சேராமல் தடுக்கும்.



சுரைக்காய்

என்ன இருக்கு: நீர்ச்சத்து, புரதம், சுண்ணாம்புச் சத்து.

இது உடல் சூட்டைத் தணிக்கும். இதன் சுபாவம் குளிர்ச்சி. இது சிறுநீரைப் பெருக்கும். உடலை உரமாக்கும். மலச் சுத்தியாகும். தாகத்தை அடக்க வல்லது. ஆனால் இது பித்த வாயுவை உண்டு பண்ணும். கடுஞ்சுரைக்காய் என்று ஒரு வகை உண்டு. இது குளுமை செய்வது. தாகத்தை அடக்கும்.

யாருக்கு நல்லது: எல்லோரும் பகலில் மட்டும் சாப்பிடலாம்.

யாருக்கு வேண்டாம்: சளித் தொந்தரவு உள்ளவர்களுக்கு.

பலன்கள்: இதயத்துக்கு வலிமை சேர்க்கும். ரத்தத்தை வளப்படுத்தி தாது பலம் சேர்க்கும். ஆண்மைச் சக்தியை ஊக்குவிக்கும். சீதளத்தையும், பித்தத்தையும் போக்கும். ஆனால் அஜீரணத்தை உண்டாக்கும். இதன் விதைகள் மேகத்தைப் போக்கும். வீரிய விருத்தியை ஏற்படுத்தும். இவ்விதைகளை சர்க்கரையுடன் சேர்த்து சில நாட்கள் உண்டு வந்தால் ஆண்மையைப் (இழந்தவர்கள்) பெறுவார்கள்.



பூசணிக்காய்

என்ன இருக்கு: புரதம், கொழுப்பு

யாருக்கு வேண்டாம்: ஆஸ்துமா, தலைவலி, சைனஸ் நோயாளிகள், உடல் பருமனானவர்கள் சாப்பிடக் கூடாது.

யாருக்கு நல்லது: குழந்தைகளுக்கு. மூலச்சூடு நோய் உள்ளவர்களுக்கு மிகமிக நல்லது.

பலன்கள்: நரம்புகளுக்கு வலுவூட்டும். வயிற்றுப் புண்களை ஆற்றும். உடல் எடையைக் கூட்டும். வெண்பூசணியே நல்லது.

கோடையில் உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கும் 24 பழங்கள்..!



கோடையில் உடலில் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். எனவே உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டால், தான் பிரச்சனைகளை போக்கி, ஆரோக்கியமாகவும், நாள் முழுவதும் சக்தியுடனும் நன்கு செயல்பட முடியும். குறிப்பாக பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பழங்களில் அதிகமான நீர்ச்சத்து இருப்பதோடு, இதர சத்துக்களும் நிறைந்துள்ளன.

தர்பூசணி :-

தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் நிறைந்திருப்பதாலும், கோடையில் இது அதிகம் கிடைப்பதாலும், இதனை அதிகம் சாப்பிடுவது, உடலை வறட்சியின்றி வைப்பதோடு, இதில் உள்ள லைகோபைன், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சரும செல்களை பாதுகாத்து, சரும புற்றுநோய் வருவதை தடுக்கும்.

ஆரஞ்சு:-

ஆரஞ்சு பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இவை உடலில் ஆங்காங்கு தங்கியுள்ள மாசுக்களை வியர்வையின் மூலம் வெளியேற்றி, தசைப்பிடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.

திராட்சை :-

திராட்சை பசியையும், தாகத்தையும் தணிக்கும் சக்தி கொண்டவை. மேலும் இது இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது. அதுமட்டுமின்றி. இதில் உள்ள பைட்டோகெமிக்கல், புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.

அன்னாசி :-

அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்னும் நொதி இருப்பதால், அது புரோட்டீன் மற்றும் கொழுப்புக்களை எளிதில் கரையச் செய்யும். கோடையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களுள் இது மிகவும் சிறந்தது.

மாம்பழம் :-

பழங்களின் ராஜாவான மாம்பழம், கோடையில் அதிகம் கிடைக்கும். மாம்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் செலினியம் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. எனவே முடிந்த அளவில் இதனை சாப்பிட்டு உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்

ஸ்ட்ராபெர்ரி:-

பெர்ரி பழங்களே மிகவும் சிறந்தது. அதிலும் குறிப்பாக ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால், கோடையில் ஏற்படும் பிரச்சனையாக சிறுநீரக பாதையின் ஏற்படும் நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்.

எலுமிச்சை :-

சிட்ரஸ் பழங்களில் ஒன்றான எலுமிச்சையை ஜூஸ் போட்டு, கோடையில் அவ்வப்போது குடித்தால், தாகம் தணிவதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின் சி சத்தும் கிடைக்கும்

ஆப்ரிக்காட் :-

வசந்த காலத்தின் இறுதியிலும், கோடையின் ஆரம்பத்திலும் அறுவடை செய்யப்படும் பழங்களில் ஒன்று தான் ஆப்ரிக்காட். இந்த பழத்தில் பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே கோடையில் இதனை சாப்பிட்டு, இதில் உள்ள சத்துக்களை பெற்று உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

செர்ரி :-

அடர் சிவப்பு நிற செர்ரிப் பழங்கள் மிகவும் சுவையுடன் இருப்பதோடு, ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்தவை. இது கோடையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம்.

வாழைப்பழம் :-

வாழைப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், இது உடலை வலுவோடும், சுறுசுறுப்புடனும் இருக்கச் செய்யும்

பீச் :-

பீச் பழத்தில் பீட்டா கரோட்டீன் மற்றும் வைட்டமின் சி நல்ல அளவில் உள்ளது. இதனை கோடையில் சாப்பிட்டால், சருமத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

நெல்லிக்காய்:-

முக்கியமாக நெல்லிக்காயை தவிர்க்கக்கூடாது. ஏனெனில் இதில வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

ப்ளாக்பெர்ரி :-

பெர்ரியில் ஒன்றான ப்ளாக்பெர்ரியில் (Blackberry) பாலிஃபீனால் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளதால், அவை சரும செல்களை பாதுகாக்கும். மேலும் இது கோடையில் விலை மலிவுடன் கிடைக்கக்கூடியது. ஆகவே முடிந்த வரையில் இதனை வாங்கி சாப்பிட்டு நன்மையை பெறுங்கள்.

பப்பாளி :-

பப்பாளியில் பப்பைன் மற்றும் கைமோபப்பைன் நொதிகள் இருப்பதால், இவை புரோட்டீன்கள் எளிதில் செரிமானமடைய உதவியாக இருக்கும்

முலாம் பழம் :-

கோடையில் தவறாமல் சாப்பிட வேண்டிய பழம் தான் முலாம் பழம் (Muskmelon). இதில் நீர்ச்சத்து அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இந்த பழத்தில் வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் ஜிங்க் அதிகம் உள்ளது.

கொய்யா :-

கொய்யாப் பழத்தில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவாக இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி-யும் இருக்கிறது. இது சளி, இருமல், வயிற்று போக்கு போன்ற கோடையில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவல்லது.

இளநீர் :-

தினமும் காலையில் எழுந்ததும் இளநீரைக் குடித்தால், உடல் மிகவும் வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இது தாகத்தையும், பசியையும் தணிக்க வல்லது.

ஓஜென் :-

மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் கலந்து, சிறிய பந்து போன்று காணப்படும் பழம் தான் ஓஜென் (Ogens). இவை மிகவும் சுவையானது மற்றும் ஆரோக்கியமானது. இது தேனின் சுவையுடையது.

அத்திப் பழம் :-

அத்திப்பழத்திலும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது உடலை புத்துணர்ச்சியுடன் வைப்பதோடு, கோடையில் ஆரோக்கியமாகவும் வைக்கும்

கேனரி பழம் :-

அடர் மஞ்சள் நிற கேனரி பழம் (Canary melon), உடலை புத்துணர்ச்சியுடன் வைக்க உதவும். மேலும் இதில் பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிகமாகவும், கலோரி குறைவாகவும் உள்ளது.

லிச்சி :-

லிச்சி பழத்தில் புரோட்ஐன், வைட்டமின்கள், கொழுப்பு, சிட்ரிக் ஆசிட், பெக்டின், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. ஆகவே இத்தகைய பழத்தை கோடையில் ஜூஸ் போட்டு குடித்தால், உடல் நன்கு குளிர்ச்சியுடன் இருக்கும்

ப்ளம்ஸ் :-

ப்ளம்ஸ் பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மேலும் இது செரிமானத்திற்கும் மிகவும் சிறந்த பழம். அதுமட்டுமின்றி இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதோடு, கோடையில் ஏற்படும் தொற்றுநோய்களை தடுக்கும்.

கிவி :-

கிவி பழம் இனிப்பாக இல்லாவிட்டாலும், இதில் வைட்டமின் சி நல்ல அளவில் நிறைந்துள்ளது. அதிலும் இதில் ஆரஞ்சில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டை விட இரண்டு மடங்கு அதிகமாக ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது

நெக்ட்ரைன் (Nectarines) :-

இதுவும் பீச் பழத்தைப் போன்று தான் இருக்கும். இதில் புறஊதாக்கதிர்களால் பாதிக்கப்படும் சரும செல்களை பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது

பேய் மிரட்டி செடியின் மருத்துவ குணங்கள் உங்களுக்கு தெரியுமா...?

இரட்டை பேய் மருட்டி செடியின் மருத்துவ குணங்கள் :-


எதிர் அடுக்குகளில் அமைந்த வெளிரிய வெகுட்டல் வாடை மணமுடைய நீண்ட இலைகளையும், வெளிரிய கருஞ்சிவப்பு மலர்க் கொத்தினையும் உடைய செடி இனம் பேய் மிரட்டி.

வேறு பெயர்கள்: எருமுட்டை பீநாறி, பிரமட்டை, இரட்டைப் பிரமட்டை, இரட்டை பேய் மருட்டி,

வகைகள்: ஒற்றைப் பேய் மிரட்டி, இதை வெதுப்படக்கி என்றும் அழைப்பார்கள். இதன் இலைகள் சற்று வட்டமான வடிவில் இருக்கும். எல்லாமே ஏறக்குறைய ஒரே மருத்துவக் குணம் உடையதாக இருக்கின்றன.

ஆங்கிலத்தில்: Anisomeles malabarica, R.br, Lamiaceae

மருத்துவக் குணங்கள்:

பேய் மிரட்டி இலையைக் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க விடாத வாதக் காய்ச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை சாறு எடுத்து அரையங்குல அளவு எடுத்து அத்துடன் அரை சங்களவு நீர்விட்டு கொதிக்க வைத்து 2 மணிக்கு ஒருமுறை ஒரு சங்களவு குடித்து வர காலரா, அம்மை குணமாகும்.

பேய் மிரட்டி இலைச்சாறு 5 சொட்டு எடுத்து வெந்நீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்கப் பல் முளைக்கும் போது ஏற்படும் பேதி நிற்கும்.

பேய் மிரட்டி இலையைக் கைப்பிடியளவு எடுத்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு 50 மில்லியளவு குடித்து வர சீதவாதக் காய்ச்சல், முறைக் காய்ச்சல், மலக் கழிச்சல் குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 2 மட்டும் எடுத்து ஒரு கைப்பிடி நெற்பொறியுடன் சேர்த்து 1/2 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 50 மில்லியளவு வீதம் 3 மணிக்கு ஒருமுறை குடிக்கக் கொடுக்க காலரா குணமாகும்.

பேய் மிரட்டி இலையை 40 கிராம் அளவு எடுத்து இடித்து, தனியாக ஒரு சட்டியில் மிளகு 10 கிராம், ஓமம் 3 கிராம் சேர்த்துப் போட்டு வறுத்துக் கருகிய சமயம் 1/2 லிட்டர் நீரை விட்டு, கொதிவரும்போது பேய் மிரட்டி இலையைப் போட்டு, 125 மில்லியளவிற்கு சுண்டக் காய்ச்சி வடிகட்டி 15 மில்லியளவில் 3 வேளையாகக் குடித்து வர குழந்தைகள் பல் முளைக்கும் போது காணும் மாந்தம் குணமாகும். 

தேவையற்ற கொழுப்பு குறைய... இதயப் படபடப்பு குறைய...! - இதப்படிங்க...!

சித்த மருத்துவ குறிப்புகள் சில டிப்ஸ்:-


மலேரியா காய்ச்சல் தீர : மிளகு, சீரகம் சேர்த்துப் பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டுவரவும்.


டைபாய்டு தீர : புன்னைப்பூவை உலர்த்தி பொடி செய்து 1 சிட்டிகை காலை, மாலை சாப்பிட குணமாகும்.


குளிர் காய்ச்சல் தீர : முருங்கைப்பட்டை அவித்து சாறு எடுத்து ரசமாக்கி சாப்பிடவும்.


இதயப் படபடப்பு குறைய : மாசிக்காயை பால்விட்டு உரசி காலை, மாலை இரு வேளை அரைகிராம் நாவில் சுவைக்கவும். (எச்சரிக்கை அதிகமானால் மயக்கம் வரும்).


மாரடைப்பு : தான்றிக்காய் பொடி 2 சிட்டிகை தேனில் கலந்து சாப்பிட விரைவில் குணமாகும்.


தொடர் வயிற்றுப் போக்கு : பப்பாளிப்பழம் சாப்பிட்டால் சரியாகிவிடும்.


நுரையீரல் பலப்பட : தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் தினமும் ஒன்று சாப்பிட்டு வர நுரையீரல் பலப்படும்.


திக்குவாய் சரியாக : இலந்தை இலைச் சாறு சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும்.


மலச்சிக்கல் தீர : அகத்தி கீரையை வாரம் ஒரு நாள் சமைத்து உண்ணவேண்டும்.


ஈறு பலமடைய : மாசிக்காயை தூளாக்கி நீரில் போட்டு காய்ச்சி வாய் கொப்பளித்தால் பலப்படும்.


இரத்தக்குழாயில் அடைப்பு நீங்க : தினம் ஒரு கப் தயிர் சாப்பிடவேண்டும்.


தேவையற்ற கொழுப்பு குறைய : பூண்டு, வெங்காயம் இவற்றை அடிக்கடி உணவில் அதிகமாக சேர்த்து வரலாம்.


எடை கூடாமல் தடுக்க : தேநீரில் எலுமிச்சம் பழசாறு கலந்து காலையில் குடித்துவர எடை கூடாமல் தடுக்கும்.


உதட்டில் வெடிப்பு : அத்திக்காயை உட்கொண்டால் வெடிப்பு குணமாகும்.

பல்வலி நீங்க எளிய வைத்தியம்..! - உங்களுக்காக...



பொதுவாக அனைவருக்கும் ஏற்படக்கூடிய பல்வேறு பல் நோய்கள் என்பன பற்களை முறையாகப் பாதுகாக்காததே.

 பல்நோய் உள்ளபோது காலையில் பல் துலக்கியவுடன் ஒரு நெல்லிக்காயை நன்றாக மென்று தின்று வரலாம். இதனால் பல் தொடர்பான பல நோய்கள் குணமாகும்.

ஈறுகளில் வீக்கமும் வலியும் ஏற்பட்டு தொல்லை தரும்போது சிக்கன வைத்தியமாக, பப்பாளியைக் கீறினால் வெண்மையான பால் வரும்.

 அந்தப் பாலை வீக்கமுள்ள இடத்தில் தடவி லேசாகத் தேய்த்தால் இரத்தமும் சீழும் வரும். பின் வலியும் வீக்கமும் குறையும்.

அல்லது சுத்தமான தேனை விரலில் எடுத்து தினந்தோறும் ஈறுகளைத் தேய்த்து வர, வீக்கம் குறையும்.

தினந்தோறும் காலையில் பல் துலக்கும்போது மிதமான வெந்நீரில் கொஞ்சம் உப்பைக் கலந்து அந்நீரில் வாயை நன்றாகக் கொப்பளித்து வருவது தொண்டை தொடர்பான அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும்.